ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...! சமூக வலைத்தளங்களில் பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதன் தரத்தை அதிகரித்து எழுத்தாளர்களின் திறமையை மேலும் வெளிக்கொண்டுவரும் பொதுவான பக்கங்கள் இருப்பது குறைவாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது இந்த முயற்சி அமையும் என நினைக்கின்றேன். ஒரு இரசிகனாக என்னுடைய ஆய்வுகள், விமர்சனங்கள் அமையும். மேலும் அவற்றை துறைசார் விற்பன்னர்களுக்கும் கொண்டு சென்று களம் அமைக்க இது ஏதுவாக அமையும். இதன்படி எனது முதலாவது முயற்சி இதோ... கவிஞர் சிகரம் பாரதியின் "வாழ வேண்டும்" என்ற கவிதையே எனது இன்றைய பார்வையில்... மனிதர்கள் பலரின் இடைக்கால வாழ்க்கையை நிறைக்கும் ஒரு விடயம், தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும், வழிதெரியாது தடுமாறிய பாதையையும் திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் விரக்தி. அத்தகைய ஒரு கவிதையே இது. கவிஞர் தலைப்பிலேயே அதனை விவரித்துவிடுகின்றார். எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு அழுத்தமான நினைவுதான் வாழ ...